தமிழ் இலக்கியங்களில் போர்: பெருமிதங்களும் பேரவலங்களும்

நிகழ்வு நாள் : 11.12.2025

தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் 11-12-2025 அன்று ‘தமிழ் இலக்கியங்களில் போர்: பெருமிதங்களும் பேரவலங்களும்’ எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கமும் ஆய்வுக்கோவை வெளியீடும் நடைபெற்றது. சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்மொழி (ம) மொழியியல் புல உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா,(ஒருங்கிணைப்பாளர்) ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.முனைவர் பெ.முருகன்,(ஒருங்கிணைப்பாளர்) முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் ஆசிரியர் தேனி மு.சுப்பிரமணி (ஒருங்கிணைப்பாளர்) ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள், பேராளர்கள், தமிழார்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டுச் சிறப்பித்தனர்.