மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு

நிகழ்வு நாள் : 03.09.2025

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் இன்று (03.09.2025) முற்பகல் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளைச் சார்பில், "சூழலியல் – தமிழ்ப் பண்பாட்டு மரபு (எழுத்தும் வழக்காறும்)" எனும் பொருண்மையில் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு நடைபெற்றது. அறக்கட்டளைப் பொறுப்பாளரும் நிறுவன இணைப்பேராசிரியருமான முனைவர் பெ.செல்வக்குமார் வரவேற்புரையாற்றிட, நிறுவன இயக்குநர் திரு. கோபிநாத் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிறுவனத் தலைவர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (பணி நிறைவு) அவர்கள் தலைமையுரையாற்றி நூலினை வெளியிட்டார். நூலாசிரியரும் பொழிவாளருமான மதுரை காமராசர் பல்கலைக்கழகம், நிகழ்த்துக் கலைப் புலம், நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின், உதவிப் பேராசிரியர் முனைவர் அ.கலையரசி அவர்களும், நிறுவனப் பேராசிரியர்களும் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.

நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் க. சுசீலா அவர்கள் நன்றியுரையாற்றிட, நிறுவன முதுகலை மாணவர் பா. கவி பொன்முத்து அவர்கள் இணைப்புரையாற்றினார், இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.